இதுதான் வானம்
என்று நீங்கள்
காட்டும் இடம் வெற்றிடம்தானே
காடுகள் என்று
நீங்கள் கைகாட்டும்
இடங்களில்
வெறும் மரங்களின்
கூட்டம் தானே!!
வார்த்தைகள் எல்லாம்
குறிப்புகள் தான் எனில்
விளக்கமும் விமர்சனங்களும்
ஏன்!
மவுனம் சொல்லாத எதை
இந்த மொழிகள்
சொல்லிவிட முடியும்?
கலாப்ரியன்
No comments:
Post a Comment