Sunday, March 15, 2026

சிலந்தியின் முயற்சி

உடைந்து போன

வீட்டுக் கூரை..
ஒட்ட வைக்கும்
முயற்சியில் சிலந்தி!

கலாப்ரியன் 

கேள்வி பதில்

 மனம் கேள்விகளைக் 

கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
பதில் தெரியாமல்
நான் மவுனியாகிறேன்..
அந்த மவுனம்
அனைத்துக் கேள்விகளுகளும்
பதில்
சொல்லி விடுகின்றது!!

கலாப்ரியன் 

கடலின் மவுனம்

 கரையில் மட்டும் தான்

அலையின் இரைச்சல்கள்..
ஆழத்தில் 
கடல்கூட அமைதிதான்!
மவுனம்தான்
முத்துக்களைப் 
பெற்றுத்தரும் என்று 
கடலுக்கும் தெரிந்திருக்கின்றது..!!

கலாப்ரியன்

வார்த்தைக் குறிப்புகள்

 இதுதான் வானம் 

என்று நீங்கள் 

காட்டும் இடம் வெற்றிடம்தானே


காடுகள் என்று 

நீங்கள் கைகாட்டும் 

இடங்களில் 

வெறும் மரங்களின்

கூட்டம் தானே!!


வார்த்தைகள் எல்லாம்

குறிப்புகள் தான் எனில்

விளக்கமும் விமர்சனங்களும்

ஏன்!


மவுனம் சொல்லாத எதை

இந்த மொழிகள்

சொல்லிவிட முடியும்?


கலாப்ரியன்

Friday, March 6, 2026

சுவை




கண்மூடி வார்த்தைகளுக்காகக்
காத்திருக்கிறேன்
மவுனமாக!

என் கவிதையை விட
அந்த மவுனம்
சற்று சுவையாகவே
இருந்தது!! 

கலாப்ரியன்